widehunt
டாப் நியூஸ்ரியல் எஸ்டேட்ரியல் எஸ்டேட் தகவல்கள்வீடுகள் வாங்க

அப்பார்ட்மென்ட் வீடு வாங்கப்போறீங்களா? இதோ உங்களுக்காக.

அடுக்குமாடி குடியிருப்புகளின் நன்மைகள் – கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

அப்பார்ட்மென்ட் அழகாக இருப்பதைவிட, நம் தேவையைப் பூர்த்திசெய்யும் இடமாக இருப்பதே முக்கியம்.

தான் வாழும் வீட்டை ஒருவர் எத்தனை தூரம் நேசிக்கிறார் என்பது அவர்தம் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம். சொந்த வீடோ வாடகை வீடோ தன் வீட்டைப் பற்றி பேசும்போது அவர்தம் பேச்சில் பெருமை கொப்பளிக்கும்.

இன்றைய காலகட்டத்தில் நகர்ப்பறங்களில் வீடு என்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவே உள்ளன. மக்கள் தொகை மிகுந்த பெரு நகரங்களில் தனி வீடு என்பது எட்டாத கனவு என்பதை உறுதிபடக் கூறலாம்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளே மக்களின் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மழைக்காலக் காளான்கள் போல நகரங்களெங்கும் தோன்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளே இதற்குச் சான்று.

நகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் வீட்டைக் கட்டமைப்பது என்பது இயலாத காரியம். அனைத்து விதமான சமூகக் கட்டமைப்புகள் கொண்ட பகுதியில் வீட்டு மனைகள் காண்பது அரிதாகிவிட்டது. அதனால் சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். மாத வருமானத்தில் வாழ்பவர்களும், தொழில் முனைவோரும் இதனை சிறந்த முதலீடுகளாகப் பார்கின்றனர்.

 

கோவை சரவணம்பட்டி பகுதியில் அழகான அப்பார்ட்மென்டில் வீடு அனைத்து வசதிகளுடன் 55 இலட்சத்தில் இருந்து உள்ளது

அப்பார்ட்மென்ட் வீடு வாங்கப்போறீங்களா?

அடுக்குமாடிக் குடியிருப்பு தரும் பாதுகாப்பு

நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையை விரும்பாதவர்கள் பலர் இருப்பினும் அது தரும் சவுகர்யங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வீட்டுப் பராமரிப்பு என்பது மிகப் பெரிய பணி. கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் கால கட்டத்தில் சிறு, சிறு ரிப்பேர் வேலைகள் ஏற்ப்பட்டால் தனி வீடு என்றால் திண்டாட்டாம்தான்.

அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பணியாளர்கள் அதை நிவர்த்தி செய்து விடுகின்றனர். திடக்கழிவு, கழிவு நீர்அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவாய் கிடைக்கின்றன.

உலகில் எவரும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதது பாதுகாப்பு. அது அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யுரிட்டி மூலம் வழங்கப்படுகிறது. காவலாளிகள் பலர் நியமிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். உள்ளே வரும் எவரும் பரிசோதிக்கப்பட்டே அனுப்பப்படுகின்றனர். அதனால் திருட்டு பயம் கிடையாது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுவாக தரைத்தளம் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சீரான படிக்கட்டுகளும் மற்றும் மின்தூக்கிகளும் அமைக்கப்படுகின்றன.

மின்தடை ஏற்படும் நேரங்களில் அவற்றை இயக்குவதற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்கெனப் பூங்காவும், வயதில் மூத்தோர் நடை பயில நடைமேடையும் பொதுவாக அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் உள்ளன. இதர வசதிகளாக உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், மருந்தகம், குழந்தைகள் காப்பகம், பல்பொருள் அங்காடி போன்ற வசதிகளும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செய்து தரப்படுகின்றன. இப்படி மக்களுக்குத் தேவையான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிச் சிறந்த தொழில்நுட்பத்தின் சின்னமாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் திகழ்கின்றன.

வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.

ஒரே இடத்துக்குள் அனைத்துப் பொருட்களையும் இடம்பெறச் செய்தாலும் அறையை அலங்காரத்தால் அழகுபடுத்தி விடுகிறார்கள். அது போன்று திட்டமிட்டுச் செயல்பட்டால் சிறிய இடத்திலும் கனவு இல்லத்தைக் கச்சிதமாய்க் கட்டமைத்து விடலாம். இலட்சக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கிய பின் அதன் உள்ளமைப்பில் கவனம் செலுத்தினால் வீடு சிறப்பாக அமையும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

அடுக்குமாடி வீடுகளின் உள்ளமைப்பில் சின்னச் சின்ன சங்கதிகளைச் சரிபார்த்தால் மிகச் சிறந்ததாக உங்கள் வீட்டை மாற்றிவிட முடியும். வரவேற்பறைக்கு அதிக இடத்தை ஒதுக்கினால் வீடு சிறியதாகத் தோன்றும். சாப்பிடும் அறை, சமையலறை போன்றவற்றை வரவேற்பறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கலாம். குளியலறை, கழிவறை போன்றவற்றைத் தனித்தனியே அமைத்தால் அதுவே அதிக இடத்தை ஆக்ரமித்து விடும். அதன் ஒரு அங்கமாக வாஷ்பேசின் அமைத்தால் இடம் மீதியாகும். இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறிய வீடுகூட சிறிது விசாலமாய்த் தெரியும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவோர் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அங்கீகாரச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், சட்ட வல்லுநர் ஒப்புதல் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். கட்டப்பட்ட இடத்துக்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ் உள்ளனவா என்று ஆராய வேண்டும். அடுக்குமாடிக் குயிருப்பின் மாடித் தளங்கள் அமைக்க அனுமதிபெறப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறிய வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பது மட்டும் முயக்கியமல்ல. அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதும் முக்கியம்.

இவ்வாறு அவசர உலகில் நகரத்து சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வாழ்வியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவை கான்கிரீட் தோட்டம் என்றாலும் நம் மனமென்னும் வண்ணத்துப்ப்பூச்சி விரும்பி வாழும் உறைவிடம். வாழ்க்கையையே சங்கீதமாக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைவரும் விரும்பும் பூலோக சொர்க்கம் என்றால் மிகையல்ல.கவிப்பேர ரசு வைரமுத்துவின் வைர வரிகளில் கூறுவதென்றால்..

“இது மாடி வீடு…/ அட கோயில் கொஞ்சம் போரடித்தால்/தெய்வம் வந்து வாழும் வீடு…”

வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

மக்கள்தொகை நெருக்கம் மற்றும் விலைவாசி காரணமாக, பெருநகரங்களில் சொந்தமாகத் தனி வீடு என்பது, பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. அத்தகையோருக்கு, அடுக்குமாடிக் குடியிருப்புகளே (அப்பார்ட்மென்ட்) நம்பிக்கை அளிக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள். பற்றிச் சொல்கிறார், தமிழ்நாடு தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த்.

* “நம் நிதிநிலை, கிடைக்கும் கடன் தொகை, அலுவலகத்திலிருந்து தூரம், பள்ளி மற்றும் கல்லூரி, மருத்துவமனை, மார்கெட், பேருந்து நிலையம் போன்ற இடங்கள், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு, குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மழையில்லாத நாள்களில் தண்ணீருக்கான மாற்று ஏற்பாடு, யூபிஎஸ் வசதி, சுற்றுச்சூழல் எனப் பல அம்சங்களையும் அலசியே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பார்ட்மென்ட் அழகாக இருப்பதைவிட, நம் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாக இருப்பதே முக்கியம்.

* பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பூங்கா, ஜிம், விளையாட்டு வசதி, ஸ்விம்மிங் பூல் போன்றவை இருப்பின், அந்த வசதிகளுக்கும் சேர்த்தே விலை நிர்ணயிக்கப்படும். எனவே, அங்கே குடியிருப்பைத் தேர்வுசெய்யும் முன்பு, அந்த ஆடம்பரங்கள் நமக்குத் தேவையா என்று பலமுறை யோசிக்க வேண்டும்.

* சிறியதோ, பெரியதோ… எந்த அடுக்குமாடிக் குடியிருப்பாக இருப்பினும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

* சிறிய மற்றும் நடுத்தர பில்டர்களை ஒப்பிடும்போது, பெரிய பில்டர்களிடம் வாங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகமாக இருக்கும். ஏனெனில், அவர்கள் அதிகப் பொருள் செலவிலும் ஆடம்பர உள் கட்டமைப்புகளுடனும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதால், லாபத்தை அதிகப்படுத்தி விற்பனை செய்வார்கள். வாங்கப்போகும் அப்பார்ட்மென்ட் பில்டரின் முந்தைய கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளின் தரம் பற்றி அறிந்திருப்பது அவசியம். அவர்களின் ‘இணையதளம்’ மட்டும் பார்த்து நம்பாமல், அவர்கள் முடித்திருக்கும் முந்தைய புராஜெக்ட்டுகளை நேரில் சென்று பார்க்க வேண்டும்.

* ஒரு அப்பார்ட்மென்டில் ஆறு அல்லது அதற்குள்ளாகக் குடியிருப்பு வீடுகள் இருக்கும்பட்சத்தில், மாநகராட்சி போன்ற அந்தந்த உள்ளாட்சி அமைப்பிடம் பிளான் அப்ரூவல் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆறு வீடுகளுக்கும் மேலாக இருந்தால், சி.எம்.டி.ஏ-வின் அனுமதி வேண்டும். சில பில்டர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சி.எம்.டி.ஏ-விடம் அனுமதி வாங்கியதுக்கும் மேலாகக் குடியிருப்புகளைக் கட்டிவிடுவர். இந்தப் பிரச்னை தெரியாமலேயே சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கிவிடுவார்கள். குறிப்பிட்ட காலம் கழித்து, உள்ளாட்சி அமைப்பு அல்லது சி.எம்.டி.ஏ அமைப்பினர் ஆய்வுசெய்து நோட்டீஸ் அனுப்பும். எனவே, அப்ரூவல் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.

* வாங்கவிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான கட்டட அனுமதிச் சான்றிதழ், கண்டிஷன் பிளானின் நகல், இறுதி கம்ப்ளீஷன் சான்றிதழ்களை அனுபவமிக்க வழக்கறிஞரிடம் சரிபார்த்து, குடியிருப்பை வாங்கலாம்.

* அடுக்குமாடிக் குடியிருப்பின் முறையான பாதுகாப்பு வசதி, அவசரக் கால பாதுகாப்பு வசதிகளைச் சரிபார்க்க வேண்டும். வாங்கப்போகும் குடியிருப்புக்கு இன்ஷுரன்ஸ் செய்துகொள்வது நல்லது. பெரிய பில்டர்களாக இருந்தால், அவர்களே இன்ஷுரன்ஸ் செய்துகொடுப்பார்கள். பில்டர்கள் செய்துகொடுக்காவிடில், நாமேதான் இன்ஷுரன்ஸ் செய்துகொள்ள வேண்டும்.

* கட்டுமானப் பணியிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பில்டரிடம், முன்கூட்டியே டோக்கன் அட்வான்ஸாகப் பெரிய தொகையைப் பலரும் கொடுப்பார்கள். சிலர் பணம் வாங்கவே இல்லை என்று ஏமாற்ற வாய்ப்புள்ளது. எனவே, டோக்கன் அட்வான்ஸை பணமாகக் கொடுக்காமல், டிடி அல்லது செக் வழியே கொடுப்பது சிறந்தது. அதை 20 ரூபாய் பத்திரத்திலும் பதிவுசெய்யவும்.

* பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தரைதளத்தை வாகனங்கள் நிறுத்த ஒதுக்கி, முதல் மாடியிலிருந்து குடியிருப்புகளைக் கட்டியிருப்பார்கள். நடுத்தர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தரைதளத்தில் பாதி பகுதியை மட்டும் வாகன நிறுத்தத்துக்கும் மீதி பகுதியில் குடியிருப்பும் கட்டியிருப்பார்கள். பொதுவாக 75 சதுரமீட்டருக்கு அதிகமான பரப்பளவில் இருக்கும் குடியிருப்புகளில், கட்டாயம் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறை, குடியிருப்பவர்களிடம் கார், டூவீலர் போன்ற வாகனங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொருந்தும். இதேபோல, 75 சதுரமீட்டருக்கு குறைவான பரப்பளவில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்டாயம் டூவிலர் பார்க்கிங் வசதியை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

* அடுக்குமாடிக் குடியிருப்புகளில், பார்க்கிங் ஏரியாவுக்கு எனக் குடியிருப்பு வாசிகளிடம் தனியாகப் பணம் பெறக் கூடாது என உச்ச நீதிமன்றத்தின் ஆணையே இருக்கிறது. ஆனால், ‘எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் கார் பார்க்கிங் அனுமதி இலவசம்’ எனக் கூறி, மறைமுகமாகக் குடியிருப்பின் விலையிலேயே கூடுதல் விலைவைத்து விற்பனை செய்கிறார்கள். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு, குடியிருப்புகளை வாங்க வேண்டும்.

* ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் மாடியிலிருக்கும் வீடுகளைக் காட்டிலும், மேலே செல்லச் செல்ல அந்த வீடுகளின் விலை குறைந்துகொண்டே இருக்கும். இது, பில்டர் மற்றும் குடியிருப்பைப் பொறுத்து மாறுபடலாம்.

* பொதுவாக, ஒரு குடியிருப்பைக் கட்டுவதற்கான செலவிலிருந்து 25 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே லாபம் வைத்து விற்க வேண்டும். தற்போது, எந்த பில்டரும் அதைப் பின்பற்றுவது இல்லை. நீங்கள் வாங்கும் வீட்டின் விலை, அதன் அசல் மதிப்பிலிருந்து அதிகளவில் வேறுபட்டால் தவிர்த்துவிடவும்.

https://widehunt.in/wp-content/uploads/2024/05/word-image-1519-3-300x117.jpeg

* ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் பில்டர், ஒவ்வொரு குடியிருப்புவாசிக்கும் அவர்களின் அப்பார்ட்மென்ட் வீட்டுக்கான பத்திரத்தை தனித்தனியே, ‘அன் டிவைடேட் ஷேர்’ முறைப்படி பதிவுசெய்து கொடுப்பார். கடைசியாக விற்கும் வீட்டை வாங்குபவருக்கு, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தாய் பத்திரத்தைப் பதிவுசெய்து கொடுத்துவிடுவார். எல்லாக் குடியிருப்புகளும் விற்றுவிட்டால், பில்டருக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடும். பிறகு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பானது, குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் பொதுவான சொத்து. எனவே, பராமரிப்புச் செலவு, பழுது பார்ப்பது போன்ற வேலைகளில் அங்கு வசிக்கும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *